பீன்ஸ் சாகுபடி
பீன்ஸ் அறிமுகம்
பீன்ஸ் கொடிவகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்றாகும். தென் அமெரிக்க நாடான பெரு தான் இதன் தாயகமாக கருதப்படுகிறது. பின்னர் ஐரோப்பியர்களின் மூலமாக மற்ற நாடுகளுக்கும் இது பரவியதாக கருதப்படுகிறது.
எனவே ஐரோப்பியர்களால் ஆளப்பட்ட இந்தியாவிலும் இதன் சாகுபடி பரவியது. தற்பொழுது உலக அளவில் சீனா மற்றும் இந்தோனேசிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பீன்ஸ் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மலை பிரதேசங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
இரகங்கள்
ஏற்காடு 1 , ஊட்டி 1 ஆகிய ரகங்கள் மலை பிரதேசங்களில் வளரும் ரகங்கள் ஆகும்.
அர்கா கோமல், மற்றும் பிரீமியர் ரகங்கள் சமவெளி பகுதிகளில் பயிரிடப்படும் பீன்ஸ் ரகங்கள் ஆகும்.
பருவம்
ஏற்காடு 1 , ஊட்டி 1 ஆகிய ரகங்கள் விளைவதற்கு பிப்ரவரி – மார்ச் மாதம் ஏற்ற பருவம் ஆகும்.
அர்கா கோமல், மற்றும் பிரீமியர் ரகங்கள் விளைவதற்கு அக்டோபர் – நவம்பர் மாதங்கள் சிறந்த பருவங்கள் ஆகும். குளிர்ந்த சீதோஷண பருவத்தில் பீன்ஸ் விளைச்சல் அமோகமாக இருக்கும்.
பீன்ஸ் சாகுபடி வண்டல் மண்ணில் அமோகமாக இருக்கும். மண்ணின் கார – அமில தன்மை 5 -6 ஆக இருக்க வேண்டும்.
பீன்ஸ் விதை நேர்த்தி
விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு விதைகளை டிரைக்கோடெர்மா 4 கிராம் /கிலோ வரை என்ற அளவில் விதை நேர்த்தி செய்வதால் பூஞ்சாண நோய்களைக் கட்டுப்படுத்தலாம். முதல் தடவை பயிர் சாகுபடி செய்வதாக இருந்தால், விதைகளை ரைசோடியம் 600 கிராம் /ஹெக்டேர் என்ற அளவில் அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நேர்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு முன் விதைகளை 15 முதல் 30 நிமிடங்கள் வரை நிழலில் உலர்த்த வேண்டும். மலைப்பகுதிகளில், விதைகளை வரிசையில் அல்லது படுக்கைகளில் விதைக்க வேண்டும். சமவெளிப் பகுதிகளில், பள்ளங்களின் பக்கவாட்டில் விதைக்க வேண்டும்.
விதை அளவு மற்றும் இடைவெளி
மலைப்பகுதி: 80 கிலோ / எக்டர் (2விதை /ஒரு குத்து ) 30 X 15 செ.மீ.
சமவெளிப்பகுதி: 50 கிலோ /எக்டர் (2 விதை /ஒரு குத்து) 45 X 30 செ.மீ. X /
வயலை தயார் செய்தல்
மலைப்பகுதி: மண்ணை முழுவதுமாக தோண்டி, தொழு உரத்தை பரப்ப வேண்டும். வேண்டிய அளவிற்கு படுக்கைள ஏற்படுத்த வேண்டும்.
சமவெளிப் பகுதி: 2 உழவிற்குப்பின் பாத்திகள் அமைக்க வேண்டும்
பாசனம்
விதைத்த உடன் உடனடியாக பாசனம் செய்ய வேண்டும்
மூன்றாவது நாள் மற்றும் வாரத்திற்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும்.
பீன்ஸ் உரங்கள்
பீன்ஸ் பயிர் பாதுகாப்பு
பூச்சிகள்
வெட்டு புழுக்கள்
1. விளக்குப் பொறியை வெயில் காலங்களில் அமைப்பதால் தாய் பூச்சிகளை
கட்டுப்படுத்தலாம்
2. தெளிப்பு நீர் பாசன அமைப்பு, பகலில் பாசனம் செய்வதால் புழுக்கள் வெளியே
வரும்
3. பைரித்ரம் பூச்சிக் கொல்லி, கோதுமை தவிடு, கரும்பு சர்க்கரை (2:1:1) என்ற
விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும்.
அசுவினிகள்
1. வேப்ப எண்ணெய் 3% தெளிக்க வேண்டும்
2.1 0% வேப்ப இலை சாற்றை பயிரிட்ட 45, 60 75வது நாளில் தெளிக்க வேண்டும்
3.1 0% பூண்டு - மிளகாய் சாற்றை பயிரிட்ட 45,60,75 வது நாளில் தெளிக்க வேண்டும்
வெள்ளை ஈக்கள்
மஞ்சள் நிற உறையிட்ட ப்ளாஸ்டிக் பானைகளை விளக்கெண்ணெய் தடவி வயலில் வைத்தால், வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.
காய்த் துளைப்பான்
10 சதவிகித பூண்டு மிளகாய் சாற்றை பயிரிட்ட 45,60,75வது நாளில் தழைத் தெளிப்பான் 3 முறை தெளிக்க வேண்டும்.
நோய்கள்
பறவை கண் புள்ளி மற்றும் சாம்பல் நோய்
3 சதவிகித தசகாவ்யாவை பயிரிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு 10 நாட்கள் இடைவெளி விட்டு தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்.
இலைப்புள்ளி நோய்
5 சதவிகித மஞ்சூரியன் தேயிலை சாற்றை பயிரிட்ட /விதைத்த ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு மாத இடைவெளியில் தழைத் தெளிப்பாக 3 முறை தெளிக்க வேண்டும்
3 சதவிகித தசகாவ்யாவை பயிரிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு 10 நாட்கள் இடைவெளியில் தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.
தேமல் நோய்
1. நோயற்ற விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. நோய் தாக்கப்பட்ட பயிர்களை அழிக்க வேண்டும்.
3. அசுவினிகள் மற்றும் வெள்ளை ஈக்களால் இந்த நோய் பரவும். ஆகவே நோய் பரப்பும் இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
4. நோய் தாக்கப்பட்ட களைகளை அகற்ற வேண்டும்.
5. தகுந்த சமயத்தில் விதைப்பு மற்றும் அறுவடை செய்ய வேண்டும்.
மண் வழியே பரவும் நோய்கள்
1. டிரைக்கோடெர்மா விரிடி 5 கிலோ / ஏக்கர்என்ற அளவில் நிலத்தை தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்
2. சூடோமோனாஸ் ப்ளோரஸ்சென்ஸ் 5கிலோ / ஏக்கர் என்ற அளவில் நிலத்தைத் தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்.
பீன்ஸ் விளைச்சல்
90-100 நாட்களில் முதிர்ந்த பச்சை காய்கள்
8-19 டன் / ஏக்கர் என்ற அளவில் விளைச்சலைத் தரும்